ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழ்நாடு அரசின் இலட்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசின் இலட்சினை இடம்பெற்றுள்ளது. தமிழகம், தமிழ்நாடு தொடர்பான சர்ச்சை பெரும் விவாதமாக மாறியிருந்த நிலையில், ஆளுநர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.