பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளின் நேரம் 8 மணி நேரமாக இருக்கும் நிலையில் 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதிய நேரா படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிகள் செயல்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் இது தவறு என சட்டசபையில் விவாதிக்கப்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.