தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் தேவைக்கான கியூ ஆர் கோடு மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். இந்த கியூ ஆர் கோடு மூலம் வீட்டில் இருந்தே பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யலாம். சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளை இதன் மூலம் செலுத்தலாம். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.