இந்தியாவில் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் முறையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.