நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் செய்பவர்களுக்கு சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பதுதான். இதற்காக ஐஆர்சிடிசி தனியாக உணவு சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அதில் ஒரே மாதிரியான உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது.

அதனால் தற்பொழுது ஐஆர்சிடிசி புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரயிலில் பயணம் செய்யும்பொழுது பயணிகள் சோமோட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்காக ஐ ஆர் சி டி சி  சொமோட்டோ நிறுவத்தோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய வசதி முதல் கட்டமாக டெல்லி உள்ளிட்ட ஐந்து இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்களுடைய ஆதரவை பொருத்து இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.