ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருமகனை விட்டு மகள் பிரிந்ததை தந்தை ஒருவர் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். உள்ளூர்வாசியான பிரேம் குப்தா என்பவர் தன்னுடைய மகளுக்கும் சச்சின் குமார் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இது அவருக்கு முதல் திருமணம் அல்ல என்று தெரியவந்தது. இருந்தாலும் கணவர் தன்னை சித்திரவதை செய்து வருவதால் பிரிந்து செல்வதே நல்லது என்று அந்த இளம் பெண் முடிவு செய்த நிலையில் மகளின் முடிவை ஏற்று அவரை மகிழ்ச்சியோடு தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.