நாட்டில் பல மாநிலங்களிலும் சமீப காலமாக பெண் சிசுக்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில் இதனை ஒழிப்பதற்காக ஹிமாச்சலப் பிரதேச அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒற்றை பெண் குழந்தையை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு இந்திராகாந்தி பாலிகா சுரக்ஷா யோஜனா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு முன்னதாக ஊக்கத்தொகை 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பெண் குழந்தையின் பெற்றோருக்கு இரண்டு லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.