உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசி கொண்டாடப்பட உள்ளது.

நாள் ஒன்றுக்கு 50,000 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றது. அதன்படி 300 ரூபாய் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் ஏழு லட்சம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.