விப்ரோ நிறுவனம் புதிய ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தொடக்கத்தில் புதிய ஊழியர்களுக்கு வழங்கிய ரூ.6.5 லட்சம் ஆண்டு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என புதிய ஊழியர்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்பட்டது. முன்னதாக 2022 – 2023 பயிற்சி முடித்த புதிய ஊழியர்களுக்கு ரூ.6.5 லட்சம் பேக்கேஜை வழங்கி இருந்த நிலையில் தற்போது சர்வதேச நிச்சயமற்ற தன்மை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை பெறுவதில் தாமதம் போன்ற காரணங்களினால் சம்பள பேக்கேஜ் ரூ.3.5 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஏற்கப்பட்டால் இனி வரும் காலங்களில் புதிய ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.