தற்போது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், விருதுநகரில் உற்பத்தி ஆலை தொடங்கி ஒரு லிட்டர் மூலிகை பெட்ரோல் ரூ. 15க்கு விற்கப்படும் என ராமர் பிள்ளை அறிவித்துள்ளார். எங்களது கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள் முன் நிரூபித்து உள்ளேன். புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன்வந்து உள்ளனர். இன்னும் 40 நாட்களில் புதிய ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். இனி எனது கண்டுபிடிப்புக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மூலிகை பெட்ரோல் மூலம் அனைத்து வாகனங்களையும் இயக்கலாம் எனவும் எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்துள்ளார்.மேலும் மூலிகை பெட்ரோல் மூலம் சமையல் எரிவாயுவை உருவாக்க முடியும்.அதற்கு கூடுதலாக 200 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.