உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட பல செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அந்தந்த நிறுவனங்கள் தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போல telegram-லும் ஸ்டோரி வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், உலக அளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான பயணர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் இறுதிக்குள் இந்த புதிய பயன்பாடுகள் நடைமுறைக்கு வந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.