கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சீனா விண்வெளியுடன் இணைத்தல் என்ற பெயரில் tiantong 1 என்ற செயற்கைக்கோளை அனுப்பி செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக்கோள் மூலம் செல்போனில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில் அதில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலமாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக்கோள்கள் வழியாக ஸ்மார்ட் ஃபோன்களில் பேச முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலமாக நேரடியாக பேச முடியும் என்பதால் நெல் நடுக்கம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் செல்போனில் தொடர்பு கொள்வது தடைபடாது என தெரிவித்துள்ளது