உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் தங்கள் சேர்க்கையை திரும்பப் பெறும்போது அவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்வி கட்டணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சில கல்லூரிகள் கட்டணத்தை திரும்ப கொடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. கவனம் தவறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது.