சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும், மழை நின்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை நீர் வடியும் வகையில் மழை நீர் வடிகால் அமைப்பு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எவ்வளவு மழை பெய்தாலும் ஒவ்வொரு மணி நேரத்தில் மழை நீர் அனைத்தும் வடிந்து விடும்.

என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் ஓரளவுக்கு மேல் நாம் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த ஆண்டுக்குள் கொசஸ்தலை ஆறு மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும், அதன் பிறகு சென்னையில் நீர் தேங்குவது முற்றிலும் தடுக்கப்படும் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.