கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தபோது ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அண்ணன் சீமான் வருவாரு அப்போ தெரியும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதுபோதை இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மதுபோதையில் வாகனத்தை இயக்கியதற்காக அபராதம் விதித்த பின்னர், இருவரையும் போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.