தமிழக அரசின் குவாரிகளில் மணல் அள்ள தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சமாதானம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மணல் எடுக்க அரசு மற்றும் தனியாருக்கு அனுமதி வழங்குவது கனிம வள சட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.