கையில் ஒரு செல்போனை வைத்துக் கொண்டால் சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் கண்டபடி பதிவு செய்யலாமா என உச்ச நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த விஜில் ஜோன்ஸ் என்பவரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பதிவு செய்துவிட்டு இனி அப்படி செய்ய மாட்டேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும் சிறைக்கு தான் செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.