தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை தமிழகத்தை சேர்ந்த சில நபர்கள் தாக்குவதாக ஊடகங்களில் தினம் தோறும் வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. என் நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோ முற்றிலும் தவறான தகவல் என்று டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வெளியான செய்தி முற்றிலும் தவறானது. பிற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் மிகுந்த பாதுகாப்புடன் பணியாற்றி வருகிறார்கள். எனவே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போல தவறான தகவல் மற்றும் வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.