ரிலையன்ஸ் தலைவர் முகேஷ்  அம்பானி  ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதாவது ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் இன்சூரன்ஸ் துறையில் புதிய நிறுவனத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் 46வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டது.

இது பொது காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு சேவைகளை வழங்குகிறது. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் ரூ.1.2 லட்சம் கோடி நிகர மதிப்பைக் கொண்டிருப்பதாகவும், நிதி வணிகத்திலும் சிறந்து விளங்குவதாகவும் கூறப்படுகிறது.