தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலமாகவும் மின்வாரிய அலுவலகத்திலும் ஆதார் மற்றும் மின் இணைப்பு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வரும் பட்சத்தில் ஏற்கனவே மூன்று முறை ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக கூறியுள்ளது. எனவே மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு இன்று கடைசி நாள் ஆகும். அதனால் இன்றைக்குள் ஆதார் மற்றும் மின் இணைப்பை தமிழக மக்கள் இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.