தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க குறைந்தபட்டியில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை பேருந்து, கார், வேன், ஆட்டோ என அனைத்து வாகனங்களும் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.