புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திட்டார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு இச்செய்தி இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. விரைவில் தமிழகத்திலும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.