மார்ச் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த மாதம் முழுவதும் எந்த விடுமுறையும் இல்லை என்று கவலையில் உள்ளவர்களுக்கு, இந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வரவுள்ளது. புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை, அதைத் தொடர்ந்து மார்ச் 30, 31 ஆகிய வார இறுதி விடுமுறைகள் சேர்ந்து 3 தொடர் விடுமுறைகள் வரவுள்ளது. மேலும் ஏப்ரல் 1 வங்கிகளில் இறுதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. இதற்கு ஏற்ற வகையில் இப்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.