சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ANPR கேமராக்கள் மூலம் 6,670 வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில்கொண்டு வழக்குகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலில் சென்னையில் பல இடங்களில் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.