பல வங்கிகளும் தங்களுடைய கிரெடிட் கார்டு தொடர்பான விஷயங்களை மாற்றி உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அந்தவகையில் HDFC வங்கியானது ரீகாலியா மற்றும் மில்லேனியா கிரெடிட் கார்டு விதிமுறைகளை மாற்றியுள்ளது.   அதன்படி ரீகாலியா கார்டுகளுக்கான லவுஞ்ச் அணுகலுக்கான விதிகள் டிசம்பர் 1 முதல் மாற்றப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி, கிரெடிட் கார்டு செலவின் அடிப்படையில் லவுஞ்ச் அணுகல் வசதி இருக்கும். ஒரு காலாண்டில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் செலவழித்தால் இரண்டு லவுஞ்ச் அணுகல் வவுச்சர்களைப் பெறலாம். அதேபோல் மில்லேனியா கார்டு மூலம் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ. 1 லட்சம் செலவழித்தால் ஓய்வறை அணுகலை  பெற முடியும்.