ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஜூலை 17ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் மற்றும் தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 21ஆம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.