இந்தியாவில் காவல்துறையில் இருக்கும் காவலர்களை பார்த்தால் மக்கள் பொதுவாகவே பயந்து நடுங்குகிறார்கள். என்னதான் காவல்துறையினர் உங்கள் நண்பன் என்று கூறி வந்தாலும் நண்பனாக பல காவல் அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் தன்னுடைய அதிகாரத்தை வைத்து அராஜகம் செய்கின்றனர். இவ்வாறான கொடுமைகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இங்கு காவலர் ஒருவர் தன்னுடைய செயலால் பலரையும் நெகிழ வைத்துள்ளார்.

அதாவது கஷ்டப்பட்ட சிறுவன் ஒருவனின் தாகத்தை தணிப்பதற்கு காவலர் ஒருவர் அவனுக்கு புதிய செருப்பு மற்றும் ஆடைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைய செய்துள்ளார். அந்த சிறுவனின் முகத்தில் சிரிப்பு எல்லை இல்லாமல் இருந்ததுடன் அந்த காவல் அதிகாரியின் காலை இரண்டு தடவை தொட்டு கும்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.