தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அவளுக்கு வந்துள்ளது. அதில் முதல் கட்டமாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, தேனி மற்றும் தர்மபுரியிலும் அமலுக்கு வந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டிலை கொடுத்து கூடுதலாக கொடுத்த பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.