இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் கால் மூலம் புது வகையான சைபர் குற்றம் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.

+92 என்று தொடங்கும் எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போன் செய்து ஐபோன், ஆப்பிள் தயாரிப்புகளை இலவசமாக தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகிறது ஒரு கும்பல். +92 என்ற பாகிஸ்தான் எண்ணில் இருந்து இந்தியர்களை குறிவைத்து பணம் பறிக்கின்றனர்.