பெண்களைக் கர்ப்பமாக்கினால் 25 லட்சம் தருவதாக நேபாளியிடம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் ஸ்போர்ட்ஸ் கிளப் சந்திப்பில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் நேபாளத்தை சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம், யாரோ ஒரு மர்மநபர் போன் செய்துள்ளார்.

அப்போது குழந்தை பேறுக்காக வரும் பெண்களைக் கர்ப்பமாக்கினால், 25 லட்சம் தருவதாக கூறியுள்ளார். மேலும், இதற்கு முதலில் 2லட்சம் முன்பணம் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று சொன்னதால், அக்கும்பல் அனுப்பிய QR CODE-ஐ ஸ்கேன் செய்து 50,000 பணத்தை இழந்துள்ளார்.