நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.18) கொண்டாடப்படுகிறது. நகரங்கள், கிராமங்கள் என பட்டிதொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநாயகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கியுள்ளனர். இஸ்லாமியர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.