மக்களவையில் நேற்று சந்திரயான் 3 குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றி பல்வேறு புனைவு கதைகள் உண்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளது. விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வீர முத்துவேல் ஆகியோர் சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளன. இவர்கள் அனைவரும் பிரபலமான கல்லூரிகளில் படித்தவர்கள் கிடையாது. இவர்கள் மூவரும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் படித்துள்ளனர். இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மட்டுமே தெரியும் என்றும் ஹிந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.