ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், நேபாளத்தைச் சேர்ந்தவரும் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ‘ரெசிஸ்டண்ட் பிரன்ட்’ எனும் பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது என்றும், அதற்குப் பின்னணியில் தடை செய்யப்பட்ட பாக் ஆதரவு அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த தாக்குதலுக்கு பதிலாக, இரு வாரங்களுக்கு பின்னர் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதனுடன் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது.

இந்த தாக்குதலுக்கு பின்பு 4 நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” என கூறி சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இந்திய மத்திய அரசு, “மூன்றாவது நாட்டின் தலையீடு எதுவும் இல்லை, இரு நாடுகளும் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வந்தன” என விளக்கம் அளித்தது.

“>

 

சமீபத்தில், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உலகளவில் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் தான். இந்தியா-பாகிஸ்தான் போர், ரஷ்யா-உக்ரைன்போர், ஈரான்-இஸ்ரேல் பிரச்சனை என அனைத்து முக்கிய அச்சுறுத்தல்களிலும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, டிரம்ப் கூறிய தகவலுக்கு ஆதரவு தந்தது போல் அமெரிக்க அரச தரப்பிலிருந்து வெளிவந்த இந்த கூற்று இந்திய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.