ஆப்கானிஸ்தானில் ஒரு இந்திய சுற்றுலாப் பயணி மீது தாலிபான்கள் காட்டிய எதிர்பாராத மரியாதை தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

தகவல்களின் படி, அந்த சுற்றுலாப் பயணியை பாஸ்போர்ட் சோதனைக்காக தாலிபான் போராளிகள் தடுத்து நிறுத்தினர். வழக்கமாக வெளிநாட்டு பயணிகளிடம் கடுமையான சோதனை நடத்தப்படும் நிலையில், அவர் “நான் இந்தியாவைச் சேர்ந்தவன்” என்று தெரிவித்தவுடன் தாலிபான்கள் அவரை அன்புடன் வரவேற்று, பாஸ்போர்ட் ஆவணங்களைச் சரிபார்க்காமலேயே “சென்று வாருங்கள்” என்று பணிவுடன் அனுப்பிவைத்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. தாலிபான்களின் இந்த நடத்தை குறித்து பலரும் ஆச்சரியத்தையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியர்களின் மீது தாலிபான்கள் இவ்வாறு நட்பான அணுகுமுறையைக் காட்டியிருப்பது அரிதான சம்பவம் என குறிப்பிடப்படுகிறது.

“>

 

“இந்தியர் என்ற ஒரே சொல்லுக்காக இவ்வளவு மரியாதை காட்டப்படுவது இந்தியாவின் சர்வதேச செல்வாக்கை வெளிப்படுத்துகிறது” என்று பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது ஆப்கானிஸ்தான்-இந்தியா உறவுகளை புதிய கோணத்தில் பேச வைக்கிறது.