அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதனால், அந்த நாடுகளின் ஏற்றுமதியை அழுத்த முயற்சி செய்கிறார். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாக விமர்சனம் செய்து, “இந்தியா, சீனா போன்ற சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளை அச்சுறுத்த முடியாது. வரி விதிப்பது போன்ற செயல்கள் சர்வதேச வர்த்தக விதிகளை மீறும்” என எச்சரித்துள்ளார்.
Russian President Vladimir Putin’s strong message for Donald Trump:
‘No one country should dominate politics or global security’: Putin warns US against pressuring India and China with tariffs @SehgalRahesha reports pic.twitter.com/tECtluN8H8
— WION (@WIONews) September 4, 2025
“>
இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்கள் என புகழாரம் சூட்டிய புதின், “யாராவது தலைமை வகிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது தண்டனை விதிப்பதற்கு முன்பு, பேசிப் புரிந்துகொள்வதே சரியான நெறிமுறை. டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தியா மற்றும் சீனாவை விட்டு விலக மறுத்தால், ரஷ்யா தலையிடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Putin has sent a strong message to Donald Trump while defending India and China. Has Russia’s strongman sounded the death knell for Western hegemony? @akankshaswarups decodes#putin #russia #unitedstates #trump #hegemony #westernhegemony #china #xijinping #economy pic.twitter.com/YMbBe1WP7z
— News18 (@CNNnews18) September 4, 2025
“>
சர்வதேச அரசியலில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது ஏற்கக்கூடியது அல்ல எனவும், உலக நாடுகள் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் புதின் கருத்து தெரிவித்துள்ளார். “டிரம்ப் தனது ஆதிக்கத்தைக் காப்பாற்ற அழுத்தம் செலுத்துவது தவறு.
இந்த கொள்கை தொடர்ந்தால், ரஷ்யாவும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளது,” எனவும் அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் ரஷ்யா, இந்தியா, சீனா இடையேயான உறவு வலுவாக இருப்பதையும், ஒருங்கிணைந்த எதிர்ப்பை அமெரிக்கா எதிர்நோக்க நேரிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
