டிசம்பர் மாதம் முதல் இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா வரை, ஹூக்ளி ஆற்றில் நீருக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தற்போது இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.