ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக, 4 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்திரபாபு மகன் நாரா லோகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர்  ரஜினிகாந்த்ஆறுதல் கூறினார். அதன்படி, சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார் என்றும் தன்னலமற்ற பொதுசேவை அவரை காப்பாற்றும் எனவும் ரஜினி ஆறுதல் கூறியுள்ளார்.