பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் உருவாக்கி உள்ள I.N.D.I.A கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கி இருக்கின்றது. 14 பேர் கொண்ட இந்த குழுவில் சரத் பவர்,   TR  பாலு, மெகுபா முக்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெல்லியில் சரத் பவர்  இல்லத்தில் தற்போது இந்த கூட்டம் தொடங்கியது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் குறித்தும், பிரச்சாரம் மேற்கொள்வது, பாஜக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு எதிராக ”இந்தியா” கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.