நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரை சமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அழைப்பிதழ் அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.