‘லஷ்கர்-இ-தொய்பா’ என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அறிவித்துள்ளது. இவர் நவம்பர் 2008 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது. புத்தாவியின் மரணத்தை உறுதி செய்து வியாழக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. மே 29, 2023 அன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புத்தாவி மாரடைப்பால் இறந்தார் என்று ஐ.நா. கூறியுள்ளது.