அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 75 முதியவர் ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சாப்பிடுவதற்கு முயன்றார். அப்போது சிப்ஸ் பாக்கெட்டை கைகளால் பிரிக்க முயற்சித்த போது சிகரெட் பற்றவைக்கும் லைட்டரை பயன்படுத்தி சிப்ஸ்  பாக்கெட்டை பிரிக்க முயற்சித்துள்ளார் .அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்து எறிய ஆரம்பித்துள்ளது.

முதியவரின் அலறல் சத்ததை கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் தீயை வந்து அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து முதியவர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.