சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் வினோதமான மற்றும் புத்திசாலித்தனமான எனப்படும் கைவினை உத்திகள் மக்களை வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், நபர் ஒருவர் குளிர்பானங்களை நீண்ட நேரம் ஜில்லென்று வைத்திருக்க ஒரு விசித்திரமான முறையைக் கையாண்டுள்ளார்.

மேலும் அவர் ஒரு சாதாரண டயப்பரில் தண்ணீரை நிரப்பி, அதை ப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றுகிறார். டயப்பரில் உள்ள உறிஞ்சும் தன்மை கொண்ட பஞ்சு போன்ற பகுதி, தண்ணீரைத் தன்னுள் தக்கவைத்துக்கொண்டு ஒரு சிறந்த ‘ஐஸ் பேக்’ போலச் செயல்படுகிறது.

“>

இவ்வாறு உறைய வைக்கப்பட்ட டயப்பருக்குள் தனது குளிர்பான பாட்டில்களை வைத்து அவர் குளிர்ச்சியைப் பராமரிக்கிறார். நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதும், பார்ட்டி செய்யும்போதும் விலை உயர்ந்த ஐஸ் பெட்டிகளுக்கு மாற்றாக இந்த எளிய மற்றும் மலிவான வழியை அவர் பயன்படுத்துவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “இந்தியர்கள் எதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிடுவார்கள்” என்றும், “இது ஒரு மட்டற்ற கண்டுபிடிப்பு” என்றும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வினோத ஐடியா தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.