இன்றைக்கு திமுக அரசால் கொடுக்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என திமுகவினர் மிரட்டுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதாவது கிராமங்களில் வீதி வீதியாக சென்று சுவர்களில் விளம்பரம் செய்யும் திமுகவினர், இந்த விளம்பரத்தை அழித்தால் உங்களுக்கு கொடுக்கப்படும் ரூ.1000 நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர் என கூறியுள்ளார். மேலும் யார் நினைத்தாலும் அந்த தொகையை நிறுத்த முடியாது. அதனை நாங்க நிறுத்தவும் விடமாட்டோம் என அவர் கூறியுள்ளார்.