சமூக வலைதளங்களில் சமீபத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜயை குறித்த ஒரு பதிவால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
எழுத்தாளர் சூரியா சேவியர் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜயின் நடத்தை மற்றும் சில தனிப்பட்ட விஷயங்களை குறிக்கும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் எதிர்பார்ப்பாளர்கள் இடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தன்னோடு கொண்டு செல்லும் கருப்பு பையில் என்ன இருக்கிறது எனப்பல தகவல்கள் சொல்லப்படுகிறது.
அதில் ஆபத்தான ஒரு தகவலும் வந்து சேர்ந்துள்ளது.
சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும்.அந்தப்பையில் பலலட்சம் விலை உயர்ந்த மதுபானம் இருப்பதாகவும், அதை குடித்தால் மட்டுமே அவரால் செயல்பட… pic.twitter.com/l8ay3bSnKF
— Surya Xavier (@suryaxavier1) October 13, 2025
“>
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் அந்த பதிவை விமர்சித்து, ஆதாரமின்றி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல எனக் கூறி வருகின்றனர். மற்றொரு புறம், சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு விஜயின் தரப்பையும் கேட்கின்றனர். இந்த சர்ச்சை தற்போது தமிழக அரசியல் மற்றும் திரைப்பட உலகத்திலும் பேசுபொருளாகி, இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
