தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில் உலக அளவில் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனுமான் கோவிலில் நடிகர் ரஜினி சுவாமி தரிசனம் செய்த நிலையில் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை, இங்கு தரிசனம் செய்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.