மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் பிரதமர் மோடியால் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் தான் மோடி அரசை இயக்குகிறார்கள். பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தலித் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை. நீங்கள் நினைப்பதை நான் செய்வேன், இது அன்பை பரப்புகின்ற தேசம் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.