காங்., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் ₹8,250 கோடியை பெற்ற பாஜக இப்போது காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருமான வட்டி, அபராதம் விதிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது உண்மையில் ஒரே நாடு, ஒரே கட்சி ஆகும் என்றும் அவர் கூறினார்.