இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை அதிக அளவு விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கானவர்கள் ரயிலில் பயணம் செய்வதால் ரயில் டிக்கெட் பெறுவது என்பது கடினமாக உள்ளது. குறிப்பாக பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்களுக்கு கடுமையான போட்டி நிலவுகின்றது. இந்த நிலையில் முக்கிய நாட்களில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காமல் போனவர்கள் ஏற்கனவே டிக்கெட் பெற்று அதனை ரத்து செய்தவர்களின் டிக்கெட்டை வைத்து பயணம் செய்யும் புதிய வசதியை ஐ ஆர் சி டி சி தற்போது அறிமுகம் செய்துள்ளது. வேறு ஒருவரின் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டில் நீங்கள் எளிதாக பயணம் செய்ய முடியும்.

ஆனால் அதற்கு முன்பு நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் அடையாளத்தை வழங்க வேண்டும். அந்த நபருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதையும் கூற வேண்டும். இதற்காக உங்களுடைய அடையாள அட்டை கேட்கப்படும். இரண்டையும் சரிபார்த்த பின்னர் டிக்கெட் உங்களுக்கு மாற்றி தரப்படும். இருந்தாலும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் பரிமாற்றத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய டிக்கெட் மாற்ற முடியாது.