காட்டின் வாழ்க்கை மனிதர்களுக்கு எப்போதும் ஆச்சரியமும் அச்சமும் கலந்த ஒன்றாகும். அங்கு ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ்வதற்காக தினமும் போராடுகிறது. அந்தக் காட்டின் “வாழ்வா – சாவா” உண்மையை வெளிப்படுத்தும் ஒரு கொடூரமான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்களை அதிர்ச்சியிலும் உணர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அந்தக் காணொளியில், ஒரு காகம் ஒரு குட்டி முயலைத் தாக்கி கொன்ற காட்சி பதிவாகியுள்ளது. தன் கூர்மையான அலகால் முயலின் கழுத்தை மீண்டும் மீண்டும் கொத்தி, சில நொடிகளில் உயிரைப் பறிக்கும் அந்த காட்சி, இதைப் பார்ப்பவர்களின் இதயத்தை உருக்கியுள்ளது.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) October 9, 2025
வீடியோவில், ஒரு புல்வெளியில் தாய் முயல் மற்றும் அதன் குட்டி ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருகில் ஒரு காகம் அமைதியாக அவற்றை நோக்கி அமர்ந்துள்ளது. சில வினாடிகள் கழித்து, தாய் முயல் எச்சரிக்கை உணர்ந்து ஓடிவிடுகிறது. அந்த நொடியில் வாய்ப்பைப் பயன்படுத்திய காகம், தனித்து போன முயல் குட்டியை நோக்கி பாய்கிறது.
தனது கூர்மையான அலகால் முயலின் கழுத்தை கொத்தி, அதை தரையில் வீழ்த்துகிறது. முயல் தப்பிக்க முயன்றும் முடியாமல் சில நொடிகளில் உயிரிழக்கிறது. காகத்தின் அந்த கொடூரத்தால் வீடியோவைப் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த 24 விநாடிகள் கொண்ட வீடியோவை @TheeDarkCircle என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 43,000 முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர், “இது இயற்கையின் கொடூரமான உண்மை — வலிமையானவன் மட்டுமே உயிர் பிழைக்கிறான்” என குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்கள், “காகத்தின் கொடூரம் மனதை உடைத்துவிட்டது; அந்த அப்பாவி முயல் குட்டியின் இயலாமை கண்ணீர் வரவழைக்கிறது” என உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
