தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். நேற்று அதிகாலையில் இருந்து தென்காசி, குற்றாலம், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்வதால் குளுமையான வானிலை நிலவுகிறது.